மாயாண்டி குடும்பத்தார் படத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அசலான தமிழ் குடும்பம் மற்றும் கலாச்சாரத்தை முன்னிறுத்திய படம் இது.
நல்ல வெற்றிப் படமும்கூட. இந்தப் படத்தை இயக்கிய ராசு மதுரவன், மேலும் சில படங்கள் தந்தார். யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் திடீரென புற்றுநோய்க்கு பலியானார்.
ஆனால் மரணத்துக்கு முன் அவர் தன்னையே பணயம் வைத்து தன் பாண்டிநாடு தியேட்டர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய படம் சொகுசுப் பேருந்து.
ஜானி - யுவன் - மனிஷா யாதவ் - சுவாதி நடித்துள்ள இந்தப் படம் நிறைவுறும் தருவாயில்தான் அவர் மரணத்தைத் தழுவினார்.
கஞ்சாகருப்பு, இளவரசு, சிங்கம்புலி, குருபரன், வெங்கல்ராவ், கிங்காங், தீப்பெட்டிகணேசன், அசத்தப் போவது யாரு ராஜ்குமார், போண்டாமணி, ஜெரால்டு, யோகி தேவராஜ்,ஜானகி, அவன் இவன் ராமராஜன், நந்தலாலா இவர்களுடன் ஒரு பாடல் காட்சியில் நிகோல் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்.
யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, நந்தலால, முத்துவிஜயன், தமிழமுதன், கவிபாஸ்கர், அருண்பாரதி, பாடல்களுக்கு ஜான்பீட்டர் இசையமைத்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் அமரர் ராசு.மதுரவன் பூமகள் ஊர்வலம், பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், பாண்டி ஒலி பெருக்கி நிலையம் போன்ற படங்களைக் கொடுத்து ரசிகர்களிடம் அருமையான குடும்பப் பட இயக்குனர் என்று பெயரெடுத்த ராசு மதுரவன் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து சொகுசுப் பேருந்தை உருவாக்கி முடித்து விட்டு படம் வெளியாவதற்கு முன்பே இறந்து விட்டார்.
இந்தப் படத்தை அவரது நண்பர் ஸ்டில்ஸ் குமார் முன்னின்று வெளியிடும் வேலைகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment