இளையராஜா எடுத்த புகைப்படத்தை திருட ஆசைப்பட்ட பாலா!

|

இளையராஜா எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி பற்றிய சுவாரஸ்ய செய்திகளுக்குப் பஞ்சமில்லை.

சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுஸில் வைக்கப்பட்டுள்ள இந்த புகைப்படக் கண்காட்சியை தினசரி பல விவிஐபிகள் வந்து பார்த்து பிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒளி ஓவியர்களான பாலு மகேந்திராவையும் பிசி ஸ்ரீராமையுமே பிரமிக்க வைத்திருக்கின்றன ராஜா எடுத்த பல புகைப்படங்களின் ஒளி அமைப்பும், கோணங்களும்.

இளையராஜா எடுத்த புகைப்படத்தை திருட ஆசைப்பட்ட பாலா!

இத்தனைக்கும் இவற்றையெல்லாம் ராஜா தன் காரில் அமர்ந்தபடிதான் எடுத்திருக்கிறார், பழைய பிலிம் கேமராவில். டிஜிட்டல் கேமராவை அவர் தொடுவதே இல்லையாம்.

நேற்று முன்தினம் கண்காட்சிக்கு வந்திருந்த இயக்குநர் பாலா, ராஜாவின் போட்டோக்களைப் பார்த்து வியந்து போய், கண்காட்சி பொறுப்பாளரிடம் அந்தப் படங்கள் தொடர்பான தகவல்களைக் கேட்டுக் கொண்டே வந்தாராம்.

ஒரு போட்டோவைப் பார்த்ததும், 'இது கிடைக்குமா' என்றாராம். 'கண்காட்சிக்காக வைத்திக்கிறார்கள்' என பொறுப்பாளர் சொல்ல, "இல்லை நீங்க அந்தப் பக்கம் போனதும் திருடிட்டுப் போகலாம்னு தோணுது" என்றாராம் பாலா, சீரியஸாக!

 

Post a Comment