சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானை இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடுகிறோம் என இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கோச்சடையான் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சௌந்தர்யா கூறியுள்ளதாவது:
கடந்த ஆண்டு இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்கின.
அந்த கொண்டாட்டங்களின் அடுத்த கட்டமாக கோச்சடையான் படம் வெளியாகிறது.
இந்திய சினிமாவில் முதல் முறையாக பர்பார்மன்ஸ் கேப்சரிங் தொழில்நுட்ப முறையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. நடிகர்கள் லைவாக நடிக்கும் படங்கள் அதிகம் வெளியாகும் இந்த நாட்டில், ஒரு மாற்று முயற்சியாக கோச்சடையான் திகழும் என நம்புகிறேன்," என்று கூறியுள்ளார்.
Post a Comment