சென்னை நகரில் கண்டிப்பாக சிவப்பு விளக்குப் பகுதி அமைக்கப்பட வேண்டும் என்று ஒரு புது இயக்குநர் அடம்பிடிக்கிறார்.
அவர் பெயர் யுரேகா. இயக்கும் படம்: சிவப்பு எனக்குப் பிடிக்கும்! ஏற்கெனவே மதுரை சம்பவம் என்ற படத்தை எடுத்தவர்.
ஜே சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த சிவப்பு எனக்குப் பிடிக்கும் படம் முழுக்க முழுக்க சிவப்பு விளக்கு சமாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாம்.
ஆபாச படமா?
படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படம் குறித்துப் பேசிய இயக்குநர் யுரேகா, "பாலியல் தொழிலாளி பற்றிய கதை என்றதும் ஏதோ ஆபாசப் படம் என்று எண்ண வேண்டாம். ஆனால் இது ஆபாசப் படமல்ல, அந்த மாதிரி சமாச்சாரமெல்ல்லாம் இல்லை. இந்தப் படத்துக்காக இரண்டு ஆண்டுகள் கள ஆய்வு செய்தேன். பல பாலியல் தொழிலாளிகளைச் சந்தித்தேன்.
போலீஸ் - ரவுடி தொலலை
அதில் அவர்கள் சொல்லும் முக்கியமான பிரச்சனை போலீஸ்காரர்கள் மற்றும் ரவுடிகளின் தொல்லைதான்.
ஒரு பாலியல் தொழிலாளி ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பாதித்தால் அவள் வீட்டுக்கு வெறும் 100 ரூபாயைத்தான் கொண்டு போகிறாள். மீதி பணத்தை போலீஸ் அதிகாரிகளும், ரவுடிகளும் பிடுங்கிக் கொள்கிறார்களாம்.
இனி பாலியல் போராளி
இதையெல்லாம் தவிர்க்க, பேசாமல் சென்னையில் சிவப்பு விளக்குப் பகுதி ஒன்றை ஆரம்பித்துவிடலாம். சென்னையில் பல குற்றங்களைக் குறைக்க இது உதவும். இந்தப்படம் வந்தபிறகு பாலியல் தொழிலாளி என்கிற பெயர் பாலியல் போராளி என்று மாறும்," என்றார் உணர்ச்சி வசப்பட்டு.
ஈசிஆர்ல வச்சிடுங்க
சென்னையில் இந்த மாதிரி பகுதிக்கு ஏற்ற இடம் எது என்று கேட்டால், சற்றும் யோசிக்காமல் 'கிழக்கு கடற்கரை சாலை', என்கிறார் யுரேகா!!
Post a Comment