எலியும், பூனையுமாக இருந்த சுள்ளான், விரல் நடிகர் திடீர் பாசத்திற்கு இது தான் காரணமா!

|

சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவரை கடுப்பேற்றவே சுள்ளான் விரல் வித்தை நடிகருடன் நெருக்கமாக உள்ளாராம்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறார். அவரை மேடையில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று புகழும் அளவுக்கு ஆகிவிட்டார்.

அவருக்கு அண்ணனாகவும், நண்பராகவும் ஏன் காட்பாதராகவும் இருந்தவர் சுள்ளான் நடிகர் தான். தற்போது சங்க தலைவரின் வளர்ச்சியை பார்த்து நாம வளர்த்து விட்ட பையன் நம்ம மார்க்கெட்டையே காலியாக்கிவிடுவார் போல என்று நினைத்த சுள்ளான் அவருடன் ஓவராக பேசுவதை குறைத்துவிட்டாராம். இயக்குனர் ஒருவர் சங்க தலைவரிடம் சென்று சுள்ளானுக்காக ஒரு கதை எழுதினேன், இது உங்களுக்கும் பொருந்தும், தற்போது உங்களுடைய படத்திற்கு தான் கிராக்கி உள்ளது என்றாராம்.

இது காற்று வாக்கில் சுள்ளான் காதில் விழுந்ததாம். இதையடுத்து சங்க தலைவரிடம் இருந்து சற்று விலகியே இருக்க முடிவு செய்துள்ளாராம் சுள்ளான். அவரை வெறுப்பேற்றவே சுள்ளான் விரல் வித்தை நடிகருடன் நெருக்கமாக உள்ளாராம்.

 

Post a Comment