சென்னை: விஜய்யை வைத்து தான் இயக்கி வரும் தீரன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் விஜய், சமந்தா உள்ளிட்டோரை வைத்து தீரன் படத்தை இயக்கி வருகிறார். கொல்கத்தாவில் கடந்த மாதம் 3ம் தேதி படப்பிடிப்பு துவங்கியது. இதையடுத்து சென்னையில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது.
படக்குழு தற்போது ஆந்திராவில் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்து கொண்டிருக்கிறது. 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இந்நிலையில் தீரன் படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யப்படும் என்று இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த பொங்கல் தல, தளபதி பொங்கலாக இருந்தது. இதையடுத்து வரும் தீபாவளி தளபதி தீபாவளி ஆக இருக்கப் போகிறது.
தீரன் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment