ஸ்ரேயா, ரீமா சென் சரக்கு பார்ட்டி ஆட்டம்... பழைய படங்களுக்கு புதிய கண்டனம்!

|

மதுவிருந்தில் ஆண்களுடன் குத்தாட்டம் போட்டதாக நடிகைகள் ஸ்ரேயா, ரீமா சென் மீது புகார் எழுந்துள்ளது.

அவர்களின் இந்த குத்தாட்டத்துக்காக சமூக சேவை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்த நடிகைகள் ஸ்ரேயாவும் ரீமா சென்னும்.

இவர்களில் ரீமா சென் திருமணமாகி குழந்தை பெற்று செட்டிலாகிவிட்டார். ஆனாலும் அவ்வப்போது நடிக்கவும் செய்கிறார்.

ஸ்ரேயா, ரீமா சென் சரக்கு பார்ட்டி ஆட்டம்... பழைய படங்களுக்கு புதிய கண்டனம்!

ஸ்ரேயா கிட்டத்தட்ட ரிட்டயர்மென்ட் நிலைக்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில் ஸ்ரேயாவும் ரீமாசெனும் மது விருந்து நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று நடனம் ஆடுவது போன்ற படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த விருந்தில் ஆண்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர். அவர்களும் நடிகைகளுடன் சேர்ந்து நடனமாடியுள்ளனர்.

ஸ்ரேயா, ரீமா சென்னின் இந்த செயலை ஆபாசம் என்று வர்ணித்துள்ள சமூக சேவை அமைப்புகள், கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

அட, அது பழசுங்க..

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, இந்த மது விருந்து நடந்து நாட்களாகிவிட்டன. ரீமா சென் குழந்தை பெற்றுக் கொண்டு அமைதியாக வாழ்கிறார். எப்போதோ எடுக்கப்பட்ட பழைய படங்களை பார்த்துவிட்டு கண்டனம் தெரிவிப்பது தேவையற்றது என்று தெரிவித்தனர்.

 

Post a Comment