பிரபுதேவா கொடுத்த மது விருந்து: விடிய விடிய ஆட்டம் போட்ட விஜய், சித்தார்த்

|

சென்னை: நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா கொடுத்த மது விருந்தில் விஜய், சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நயன்தாராவை பிரிந்த பிறகு மும்பை சென்ற பிரபுதேவா அப்படியே அங்கேயே தங்கிவிட்டார். ரீமேக் படங்களை எடுப்பதில் வல்லவராக உள்ளதால் அவரை பாலிவுட் கொண்டாடுகிறது.

பிரபுதேவா கொடுத்த மது விருந்து: விடிய விடிய ஆட்டம் போட்ட விஜய், சித்தார்த்

இந்நிலையில் பிரபுதேவா திடீர் என்று சென்னை வந்து தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து மது விருந்து அளித்துள்ளார். அந்த விருந்தில் இளைய தளபதி விஜய், சித்தார்த், இயக்குனர் ஷங்கர், நாசர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மது விருந்து விடிய விடிய நடந்துள்ளதாம்.

நாசர், ஷங்கர் ஆகியோரை ஓரமாக உட்கார வைத்துவிட்டு யூத் ஹீரோக்களுடன் விஜய் பார்ட்டியை என்ஜாய் செய்துள்ளார். ஒரு காலத்தில் நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்லாமல் இருந்தவர் விஜய்.

அண்மை காலமாக விஜய் நள்ளிரவு பார்ட்டிகளில் விடிய விடிய தூள் கிளப்பி வருகிறார் என்று செய்திகள் வெளியாகின.

 

Post a Comment