2 நடிகையும் சேர்ந்து நடிக்கையில் என்ன பூகம்பம் வெடிக்குமோ: பயத்தில் தயாரிப்பாளர்கள்

|

சென்னை: ஏ.ஜே. நடிகர் நடித்து வரும் படத்தில் 2 நாயகிகளும் ஒருசேர தோன்றும் காட்சியை படமாக்கும்போது என்ன பிரச்சனை வரப் போகிறதோ என்று தயாரிப்பாளர்கள் பயத்தில் உள்ளார்களாம்.

மேனன் இயக்குனரின் படத்தில் ஏ.ஜே. நடிகர் நடித்து வருகிறார். அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதனால் படத்தில் 2 நாயகிகள். அதில் உயர்ந்த நடிகைக்கு காதல் செய்வதும், டூயட் பாடுவதும் தான் வேலையாம். இரண்டாவது நாயகியான மூனுஷாவுக்கு வலுவான காதபாத்திரமாம்.

இதை அறிந்த உயர்ந்த நடிகை ஏ.ஜே.விடம் கூற அவரோ இயக்குனரிடம் இரண்டு பேருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுங்கள் என்று கூறியிருக்கிறார். நடிப்பவர்களிடம் கதை என்ன என்பதையே கூறாத இயக்குனரிடம் போய் உயர்ந்த நடிகை மொத்த ஸ்கிரிப்ட்டையும் கேட்டுள்ளாராம்.

இந்நிலையில் 2 நாயகிகளும் சேர்ந்து வரும் காட்சியை படமாக்க உள்ளார்களாம். அப்போது என்ன பூகம்பம் வெடிக்குமோ என்று தயாரிப்பாளர்கள் பயத்தில் உள்ளார்களாம்.

 

Post a Comment