சென்னை: வெற்றி பெற்ற திரை படங்களின் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் வெளியாவது இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கும் விஷயமாகிவிட்டது.
தயாரிப்பாளர் ஆர் பி சவுத்திரி மகன் ரமேஷ் நடித்த படம் ஜித்தன். அந்தப் படம் தந்த அறிமுகத்தால் அவர் பெயரே 'ஜித்தன்' ரமேஷ் ஆகிவிட்டது.
இப்போது மீண்டும் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்க, ஜித்தன் 2 என்ற பெயரில் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட சில அமானுஷ்யங்களின் அடிப்படையில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையே 'ஜித்தன்2'.
ராகுல் பரமஹம்சா என்ற புதிய இயக்குனர் இந்தப் படம் மூலம் அறிமுகமாக , ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் தயாராகும் 'ஜித்தன் 2' படத்தில் இரண்டு நாயகிகள். மும்பையின் பிரபல விளம்பர மாடல்களான இவர்களுக்கு தமிழில் இது முதல் படமாகும்.
மேலாண்மை கல்வியில் தங்கபதக்கம் வென்றவர் இயக்குனர் ராகுல்.
'படத்தை இயக்குவது மட்டுமல்லாமல், சரியான முறையில் விளம்பரம் செய்து வெளியிடுவதுதான் இன்றைய காலகட்டத்தில் சவாலான சூழ்நிலை . எனவே என் படிப்பும் அனுபவமும் அதை திறம் பட செய்ய உதவும் என நம்புகிறேன்," என்கிறார்.
Post a Comment