4 பாதுகாவலர்கள் புடை சூழ ஷூட்டிங்கிற்கு வரும் அங்காடி நடிகை!

|

சில காலம் தலைமறைவாக இருந்த அங்காடி நடிகை, தற்போது புதிய தமிழ்ப் படமொன்றில் நடித்து வருகிறார்.

தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரின் படத்தில் நடிக்க மாட்டேன் என்ற பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது. இதற்கிடையே அங்காடியை புதிய படத்தில் நடிக்க விடக் கூடாது என ஒரு குரூப்பே செயல்பட்டு வருகிறது.

இதனால், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு ஏதாவது ஆபத்து நேரலாம் என அங்காடி நடிகை பயப்படுகிறாராம். இந்தப் பயம் காரணமாக தனக்கென ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்கி வைத்துள்ளார் அங்காடி.

நான்கு பேர் கொண்ட இந்த பாதுகாப்புப் படை படப்பிடிப்பு உள்பட அனைத்து இடத்திற்கும், எங்கேயும், எப்போதும் அங்காடி நடிகைக்கு பாதுகாப்பு வளையமாக உடன் வருகிறார்களாம். இவர்களுக்கான செலவை தயாரிப்பாளர் தலையில் கட்டாமல் தானே பார்த்துக் கொள்கிறாராம் நடிகை.

 

Post a Comment