மும்பை: பாலிவுட்டின் காதல் மன்னன் என்றழைக்கப்பட்ட மறைந்த ராஜேஷ் கன்னாவின் மும்பை பங்களா ரூ 90 கோடிக்கு விலை போனது.
இந்தி பட உலகின் காதல் மன்னன், வசூல் நாயகன் என்ற பெருமைக்குரியவர் ராஜேஷ் கண்ணா. 1960, 1970 மற்றும் 80-களில் அவர் நடித்த பல படங்கள் வெற்றிக் கொடி நாட்டின.
1973-ல் அன்றைக்கு முன்னணியில் இருந்த நடிகை டிம்பிள் கபாடியாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ட்விங்கிள் கன்னா, ரிங்கி கன்னா என இரு மகள்கள் உள்ளனர். இந்தி திரையுலகில் முதன் முதல் அதிக சம்பளம் வாங்கிய நடிகரும் ராஜேஷ் கன்னாதான். ஒரு கட்டத்தில் வயது காரணமாக சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஆனாலும் பின்னர் சில படங்களில் நடித்தார். கடந்த 2012-ல் தனது 69-வது வயதில் மரணம் அடைந்தார்.
ராஜேஷ் கன்னாவுக்கு மும்பை கார்ட்டர் ரோட்டில் 603 சதுர மீட்டர் பரப்பளவில் பிரமாண்ட பங்களா உள்ளது. ஆசீர்வாத் என்றழைக்கப்பட்ட அந்த பங்களா பாலிவுட்டில் மிகவும் பிரபலமானது.
கடற்கரை அருகில் அமைந்துள்ள இந்த வீட்டை விற்பனை செய்ய இரு மகள்களும் முடிவு செய்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதை வாங்க மும்பையில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் மோதினர். இறுதியில் தொழில் அதிபர் ஷாஜி கிரன் ஷெட்டி ரூ.90 கோடி கொடுத்து ராஜேஷ் கண்ணா பங்களாவை வாங்கினார்.
Post a Comment