சென்னை: பயப்படாதவன் பட இசை வெளியீட்டு விழாவுக்கு ஹீரோயின் வராததால் அவர் மீது சிங்கம் கோபத்தில் உள்ளாராம்.
பயப்படாதவன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு ஹீரோ சிங்கம் உள்பட அனைவரும் வந்திருந்தனர். ஆனால் ஹீரோயின் வரவில்லை. அவர் தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் என்று கூறப்பட்டது.
பின்னர் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இசை வெளியீட்டு விழாவுக்கு வர முடியவில்லை என்று ஹீரோயின் தெரிவித்திருந்தார். ஆனால் விழா நடந்த மறுநாள் டிவி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதுடன், ஆந்திராவில் நடந்த ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டார்.
இதை அறிந்த சிங்கத்திற்கு நடிகை மீது கோபமாம். சிங்கம் படத்தை அடுத்து தற்போது தளபதி மற்றும் சீயான் படங்களிலும் நடிகை பிஸியாக உள்ளார்.
இந்த படங்கள் ஹிட்டானால் டோலிவுட்டை போன்றே கோலிவுட்டிலும் வெற்றி நாயகியாக வலம் வர திட்டமிட்டுள்ளாராம்.
அப்படின்னா, இன்னும் உஷாரா இருக்கணுமில்ல!
Post a Comment