திருப்பதி: பாலிவுட் நடிகர் விவேக்ஓபராய் தனது குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மகனின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினார்.
பாலிவுட் நடிகர் விவேக்ஓபராய் ஏழுமலையான தரிசிப்பதற்காக குடும்பத்துடன் நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார். சாமி தரிசனம் செய்த அவருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் இருந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், என்னுடைய மகனுக்கு தலைமுடி காணிக்கை செலுத்துவதற்காக நான் குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு வந்தேன் என்றார்.
நடிகர் விவேக்ஓபராயை பார்ப்பதற்காக கோவில் வாசலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் விவேக்ஓபராய்க்கு கை கொடுத்து வாழ்த்து சொல்ல முயன்றனர்.
அப்போது தேவஸ்தான பாதுகாப்புத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
Post a Comment