அண்ணன் செல்வமணி... அண்ணி ரோஜா... அஞ்சலியை மடக்க புது ட்ராக்கில் மு களஞ்சியம்!

கையில் காசில்லை.. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் களஞ்சியம்... நடிகை அஞ்சலிதான் பணம் கொடுத்து உதவ வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு 'மொட்டைக் கடிதாசி' வெளியிட்டதும், பின்னர் உடலில் எந்தக் காயமும் இல்லாமல் படுக்கையில் படுத்துக் கிடந்த களஞ்சியம் படம் வெளியாகி, அவரது உடம்புக்கு ஒன்றுமில்லை என்ற உண்மை அம்பலமானதும் நினைவிருக்கலாம்.

நடிகை அஞ்சலியை மிரட்டல் மூலம் வளைக்க முடியவில்லை என்பதால், களஞ்சியம் போட்ட சென்டிமென்ட் ட்ராமா என திரையுலகினரே கூறும் அளவுக்குப் போய்விட்டது களஞ்சியத்தின் இந்த செயல்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு சென்டிமென்ட் அறிக்கை வெளியிட்டுள்ளார் மு களஞ்சியம். தங்களின் அண்ணி ரோஜா எம்எல்ஏவும், அண்ணன் ஆர் கே செல்வமணியும்தான் தன்னைக் காப்பாற்றியதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்ணன் செல்வமணி... அண்ணி ரோஜா... அஞ்சலியை மடக்க புது ட்ராக்கில் மு களஞ்சியம்!

இதன் மூலம் ஆந்திராவில் ரோஜாவை வைத்தும், தமிழில் இயக்குநர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அவரது கணவர் ஆர்கே செல்வமணியையும் காட்டி ரோஜாவை மடக்க களஞ்சியம் திட்டமிட்டுள்ளார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

இன்று களஞ்சியம் வெளியிட்ட அறிக்கை இது:

கடந்த 20-ந் தேதி ராஜமுந்திரியில் நடந்த எனது நண்பரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு அதிகாலையில் சென்னை திரும்பினேன். வழியில் கார் டயர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது. கார் இடதுபுறமாக பல தடவை புரண்டது. அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அரசு மருத்துவமனையில் கிடத்தப்பட்டு இருந்தேன். வலி தாங்க முடியவில்லை. கண்களைத் திறக்க முடியவில்லை.

அண்ணன் செல்வமணி... அண்ணி ரோஜா... அஞ்சலியை மடக்க புது ட்ராக்கில் மு களஞ்சியம்!

தெலுங்கு மொழியும் எனக்கு தெரியாது. மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை. போலீஸ் அதிகாரிகளுக்கும், செவிலியருக்கும் தெலுங்கு மொழியில் வாக்குவாதம் நடக்கிறது. டாக்டர்கள் தாமதமாக வந்தால் இவர்களைக் காப்பாற்ற முடியாது. எனவே உடனே வரச்சொல்லுங்கள் என்று போலீஸ் அதிகாரி சொல்கிறார்.

எனக்கு அரைகுறையாய் புரிந்தது. நான் செத்து கொண்டிருக்கிறேன். முகத்தில் ரத்தம் வழிந்து உறைந்து இருந்தது. என்னுடன் பயணம் செய்தவர்களுக்கு என்ன ஆனது என்றும் புரியவில்லை.

அப்போது ஒருவர் போலீஸ் அதிகாரியிடம் நான் ரோஜா எம்.எல்.ஏ.விடம் இருந்து வருகிறேன். மேடம் லைனில் இருக்காங்க பேசுங்க என்கிறார். ரோஜா பேசியபிறகு நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிறந்த மருத்துவ நிபுணர்களால் காப்பாற்றப்பட்டோம். மருத்துவ செலவுக்கு எந்த பணமும் கேட்கவில்லை.

தமிழகத்தின் மருமகள் ரோஜா எம்.எல்.ஏ.வால் காப்பாற்றப்பட்டோம். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். என்னுடன் வந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு நொறுங்கினேன்.

அப்போது தான் நான் எனது உதவியாளர் பெருஞசித்தன் மூலமாக திரைப்படத்திலே என் நம்பிக்கைக்கு உரிய இடத்தில் இருந்து செயல்பட்ட, எமது தமிழர் நலம் பேரியக்கத்தின் செயல் வீரன் தோழர் அருண் குமார் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்கிற செய்தியை அறிந்து நொறுங்கிப்போனேன். என்னால் அதை சீரணிக்க முடியவில்லை.

கதறி அழுகிறேன். எனது ரத்த அழுத்தம் உயர்கிறது. மருத்துவர்கள் ஓடிவருகிறார்கள். செய்தி சொன்ன பெருஞசித்தனைத் திட்டுகிறார்கள்.

தோழர் அருண்குமார் எனது ஊர்க்காரர். அமைதியான தமிழ்தேசிய உணர்வாளர். அவரைக் காப்பாற்றி விட்டு நான் செத்திருக்கலாமே என்று தோன்றுகிறது. அருணை நினைத்து நினைத்து கலங்கிக்கொண்டே மருத்துவமனையில் ஒரு நடைபிணமாக நான் கிடக்கிறேன்.

எனினும் பிரதிபலன் பாராமல் எங்களை நொடிப்பொழுதில் ஆபத்திலிருந்து காப்பாற்றிய அண்ணி ரோஜா எம் எல் ஏ அவர்களுக்கும், எங்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களின் சங்கத் செயலாளர் அண்ணன் ஆர்.கே.செல்வமணி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதோடு என் மீது அக்கறை கொண்டு நலம் விசாரித்த அத்தனை தமிழக அரசியல் தலைவர்களுக்கும்,அனைத்துக்கட்சி தொண்டர்களுக்கும்.தமிழ்தேசிய இயக்கத் தோழர்களுக்கும்,திரைப்படத்துறை உறவுகளுக்கும், பத்திரிக்கைத்துறை மற்றும் இணையம் சார்ந்த அனைத்து ஊடகத்துறையினருக்கும், என் மீது மாறாத அன்புகொண்ட நண்பர்களுக்கும், ஈழத் தமிழ் உறவுகளுக்கும் எமது தமிழர் நலம் பேரியக்கத்தின் உயிர்த் தோழர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் என் உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

 

விபச்சார ரெய்டு: தொழில் அதிபர்களுடன் கையும் களவுமாக சிக்கிய தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்டார்.

விபச்சார ரெய்டு: தொழில் அதிபர்களுடன் கையும் களவுமாக சிக்கிய தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு

இவர் தமிழில் 'ரா ரா' படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தமிழில் ரகளை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது கருணாசுக்கு ஜோடியாக சாந்தமாமா படத்தில் நடித்து வருகிறார்.

விபச்சார ரெய்டு: தொழில் அதிபர்களுடன் கையும் களவுமாக சிக்கிய தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு போலீசார் அந்த ஹோட்டலுக்கு திடீர் என்று சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

(ஸ்வேதா பாசு படங்கள்)

விபச்சார ரெய்டு: தொழில் அதிபர்களுடன் கையும் களவுமாக சிக்கிய தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு

அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்ட தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு பிரசாத், சில தொழில் அதிபர்கள் கையும், களவுமாக பிடிபட்டனர். இதையடுத்து ஸ்வேதா பாசு, ஏஜெண்ட் பாலு உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த விபச்சார தொழிலில் மும்பை மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பெரிய தொழில் அதிபர்கள் ஈடுபட்டுள்ளார்களாம். முன்னதாக தொலைக்காட்சி சேனல் ஒன்று செய்த ஸ்டிங் ஆபரேஷனின்போது ஸ்வேதா எசக்குபிசக்காக இருந்தது ரகசிய கேமராவில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Read in English: Sex Racket: Makdee movie actress caught
 

அமிதாப்பச்சனுக்கு திடீர் காய்ச்சல்: படப்பிடிப்பு ரத்து

மும்பை: பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் திடீர் உலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீபிகா படுகோனே, இர்பான் கான் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகு' என்ற இந்தி படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமிதாப் பச்சன் கலந்துகொண்டார்.

அமிதாப்பச்சனுக்கு திடீர் காய்ச்சல்: படப்பிடிப்பு ரத்து

படப்பிடிப்பு தளத்தில் இருந்த அமிதாப் பச்சனுக்கு, திடீரென்று வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் உடல் நலம் சோர்வாக காணப்பட்டார். உடனே படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழுவினர், உடனடியாக அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்தனர்.

இந்நிலையில், தனது உடல்நலம் குறித்து ‘டுவிட்டர்' வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமிதாப்பச்சன், ‘அட, காய்ச்சல் ஏற்பட்டு சரிந்துவிட்டேன்' என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், தான் மீண்டுவர வேண்டும் என்று தனக்காக பிரார்த்தனை செய்யும் அனைத்து ரசிகர்களுக்கும் அவர் நன்றியையும் தெரிவித்து கொண்டுள்ளார்.

 

ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சி காண காத்திருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!

ரோஸ் டெய்லர்.... நியூஸிலாந்து அணியின் பிரபல கிரிக்கெட் வீரர். இவருக்கு நடிகர் ரஜினியின் லிங்கா படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க விருப்பமாம்.

'லிங்கா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட்டது.

ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சி காண காத்திருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!

அதனை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, "நிச்சயம் முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டிய படம்" என்று குறிப்பிட்டு #thailavarrajnikanth #superstar #favorite #legend ஆகிய ஹேஷ்டேக்குகளை பதிவு செய்திருந்தார்.

தினேஷ் கார்த்திக்கின் ட்விட்டர் பக்கத்தை பின் தொடரும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரோஸ் டெய்லர், 'லிங்கா' குறித்த அந்தப் பதிவுக்கு பதில் அளித்திருந்தார். அதில், 'உலகின் மிகச் சிறந்தவர்களில் ஒருவர்' என நடிகர் ரஜினியை ரோஸ் டெய்லர் புகழ்ந்திருந்தார்.

ரோஸ் டெய்லருக்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், "உங்களிடம் இருந்து இதைக் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. தலைவர் ரஜினிகாந்த் படத்தைப் பார்ப்பதற்கு நீங்களும் தயாராகுங்கள்," என்று கூறியிருந்தார்.

அதற்கு ரோஸ் டெய்லர், "நிச்சயம்.. அடுத்த முறை நான் வரும்போது அழைத்துச் செல்லுங்கள்.." என்று பதிலளித்துள்ளார்.

ட்விட்டரில் இதையெல்லாம் பார்த்த ரஜினி ரசிகர்கள், ரோஸ் டெய்லரும் தீவிர ரஜினி ரசிகர் என்று கூறி பதிவுகள் போட்டு வருகின்றனர்.

 

சலீம் - விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.5/5

நடிப்பு : விஜய் ஆன்டனி, அக்ஷா பர்தசானி, ஆர்என்ஆர் மனோகர், சந்திரமவுலி

ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா

இசை: விஜய் ஆன்டனி

மக்கள் தொடர்பு: நிகில்

தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆன்டனி, ஆர்கே சுரேஷ், எம்எஸ் சரவணன்

இயக்கம்: என்வி நிர்மல் குமார்

தனக்கு எது சரியாக வருமோ அதைத் தேர்வு செய்து, உண்மையாக உழைப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதற்கு இன்னுமொரு உதாரணமாக வந்திருக்கிறது விஜய் ஆன்டனி நடித்துள்ள இரண்டாவது படமான சலீம்.

இது ஒரு ஆக்ஷன் படம்தான். ஆனால் அதிரடியான லாஜிக் மீறல்கள் இல்லாமல் இயல்பாக நம்மையும் உள்ளே இழுத்துக் கொள்ளும் அளவுக்கு அழுத்தமான படமாகத் தந்திருக்கும் அறிமுக இயக்குநர் நிர்மல் குமாருக்கு பாராட்டுகள்.

சலீம் - விமர்சனம்

நான் படத்தின் தொடர்ச்சியாகக் கதை ஆரம்பிக்கிறது. யாருமற்ற சலீம் மருத்துவம் முடித்து நேர்மையான டாக்டராக ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறார். நேர்மை, சேவை மனப்பான்மை, எல்லாவற்றிலும் நியாயம் பார்க்கும் மனசு, சமூகத்தின் மேல் உண்மையான அக்கறை என செல்லும் சலீமின் போக்கு, அந்த தனியார் மருத்துவமனைக்குப் பிடிக்காமல் போகிறது.

(சலீம் படங்கள்)

சலீமுக்கு அக்ஷாவுடன் திருமணம் நிச்சயமாகிறது. இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். சலீமின் குணத்துக்கு நெரெதிர் குணம் கொண்டவராக அக்ஷா. எனவே திருமணம் வேண்டாம் எனக் கூறிவிடுகிறார்.

ஒரு நாள் சலீமை விருந்துக்கு அழைக்கும் மருத்துவமனை நிர்வாகம், தங்களின் கொள்ளைக்கு உடந்தையாக இல்லாத சலீமை, வேஸ்ட் என்று கூறி டிஸ்மிஸ் செய்வதாக அறிவிக்கிறது. அத்துடன் அந்த விருந்துக்கான பில்லைக் கூட சலீம்தான் கட்ட வேண்டும் என அடாவடி பண்ண.. வெகுண்டு எழுகிறார் சாது சலீம்.

சலீம் - விமர்சனம்

அதன் பின் நடப்பவற்றை நிச்சயம் கதையாக சொல்லிவிடக் கூடாது. பார்த்து அனுபவிக்க வேண்டும்!

இந்த சமூகத்தின் பெரும் நோயாக மாறிவிட்ட தனியார் மருத்துவமனைகளை மீண்டும் தைரியமாகத் தோலுரித்திருக்கிறது சலீம்.

சலீம் என்ற பெயரைக் கேட்டதும், காவல் அதிகாரி நீ எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன்.. அல்கொய்தாவா.. லஷ்கர் இ தொய்பாவா என பட்டியல் போட, அவரை இடைமறிக்கும் சலீம்... 'என் பேரை வைச்சு இப்படி முடிவெடுக்காதீங்க ஸார்.. வேணும்னா என் பேரை விஜய்ன்னோ ஆண்டனின்னோ வைச்சுக்குங்க.." -என நிறுத்தும் இடம், போலீசாரின் இன்றைய மனப்போக்கின் மீது விழுந்த சவுக்கடி!

மகன் பிணையக் கைதியாக உள்ள ஆத்திரத்தில் போலீசுக்கு போன் பண்ணும் அமைச்சர், 'என்னய்யா புடுங்கிக்கிட்டிருக்கீங்க?' என எகிற, அதே சூட்டுடன், 'வாய்யா நீயும் வந்து புடுங்கு,' என்று அதிகாரி திருப்பிக் கொடுக்கும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது.

சலீமாக நடித்திருக்கும் விஜய் ஆன்டனி நிஜமாகவே கவர்ந்துவிட்டார். ஆக்ஷன் படங்கள் என்ற பெயரில் முன்னணி நடிகர்கள் படுத்தும் பாட்டுக்கு, இந்த சலீம் ரொம்பவே ஆறுதல். இயல்பாக நடிக்க வருகிறது. வசனங்களை உச்சரிப்பதிலும் தனி ஸ்டைல். சண்டைக் காட்சிகளில் நல்ல தேர்ச்சி... விஜய் ஆன்டனியை இரண்டாவது படத்திலேயே முன்னணி நடிகராக்கியிருக்கிறது சலீம் என்றால் மிகையல்ல.

சலீம் - விமர்சனம்

நாயகியாக வரும் அக்ஷா பர்தசானி சொன்ன வேலையைச் செய்திருக்கிறார். அவரது நடிப்பு நம்மைக் கவரும் ஒரே இடம்... அந்த ஹோட்டலில் அலட்டலோடு சலீமைக் காணப் போய், அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறாரே.. அங்குதான்!

சுற்றிலும் அத்தனை போலீசார், மீடியா சூழ்ந்து நிற்க, அமைச்சரின் மகனை துப்பாக்கி முனையில் காருக்குள் திணிக்கும் காட்சி நிஜமாகவே செம த்ரில்.

இந்தப் படத்தில் விஜய் ஆன்டனிக்குப் பிறகு கவரும் இருவர் அமைச்சராக வரும் ஆர்என்ஆர் மனோகர் மற்றும் காவல் அதிகாரி செழியனாக வரும் சந்திரமவுலி. அதிலும் பின்னவர், அமைச்சர் மகனுக்கு வயசு பதினேழுதான் ஆகுது... சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்குத்தான் போகப் போறான் என க்ளைமாக்ஸில் சலீமிடம் சொல்லும் காட்சியும், அதை உணர்ந்து சலீம் தரும் ஒரு சிறு புன்னகையும் க்ளாஸ்.

இசையிலும் கலக்கியிருக்கிறார் விஜய் ஆன்டனி. குறிப்பாக பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம். மஸ்காரா, உன்னைக் கண்ட நாள் முதல் பாடல்கள் அருமை. இத்தனை அருமையாக பாடல்கள் அமைக்கும் திறனிருக்கும்போது, எதற்காக பழைய ரீமிக்ஸ் விஜய் ஆன்டனி?

சலீம் - விமர்சனம்

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய தூண். ஆரம்பக் காட்சிகளில், பாத்திரங்களின் உணர்வுகளுக்கேற்ப நின்று நிதானிக்கும் அவர் கேமிரா, பிற்பாதியில் அத்தனை வேகம் காட்டியுள்ளது.

ஆரம்பக் காட்சிகளில் கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கும் காட்சிகள் இருந்தாலும், பிற்பாதி அவற்றை நியாயப்படுத்திவிடுவதால், எடிட்டரைக் குற்றம் சொல்லும் அவசியமும் இல்லாமல் போய்விட்டது.

வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. என்வி நிர்மல் குமாரின் இயக்க நேர்த்தி, அவர் ஒரு அறிமுக இயக்குநர் என்ற நினைப்பையே போக்கிவிட்டது.

சலீம்.. போடலாம் ஒரு சலாம்!

 

நயனதாரா நடித்த ஸ்ரீராமராஜ்யம் பட இயக்குநர் பாபு காலமானார்

நயனதாரா நடித்த ஸ்ரீராமராஜ்யம் பட இயக்குநர் பாபு காலமானார்

என்.டி.ராமாராவ், சிரஞ்சீவி, நாகேஷ்வர ராவ், அனில்கபூர், ஸ்ரீகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களை இயக்கிய பாபு, தமிழில் ‘நீதி தேவன் மயங்குகிறான்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

பாலகிருஷ்ணா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘ஸ்ரீராம ராஜ்யம்'உட்பட 51 படங்களை அவர் இயக்கியுள்ளார்.

2013-ம் ஆண்டில் பத்மஸ்ரீவிருது, ஆந்திர பல்கலைக்கழகம் வழங்கிய கலா பிரபூர்ணா விருது உட்பட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு தெலுங்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏராளமான நடிகர், நடிகையர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாபுவின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.