மேலே நீங்கள் படித்ததுதான் என்னை அறிந்தால் படத்தின் டீசரில் இடம்பெற்றிருக்கும் அஜீத்தின் பஞ்ச் வசனம்.
அஜீத் இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்க, கவுதம் மேனன் இயக்கியுள்ள என்னை அறிந்தால் படத்தின் டீசர் வழக்கம்போல நேற்று நள்ளிரவு வெளியானது.
வெளியான வேகத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த டீசரில், அஜீத் பேசும் முத்திரை வசனம் அனைவரையும் கவர்வதாக உள்ளது.
"ஒரு மெல்லிசான கோடு. கோடுக்கு இந்தப் பக்கம் இருந்தா நான் நல்லவன். அந்தப் பக்கம் போய்ட்டா நான் ரொம்ப கெட்டவன். இந்தப் பக்கமா அந்தப் பக்கமான்னு முடிவு பண்ண வேண்டிய நேரம் வந்துடுச்சி வாழ்க்கைல ஒரு நாள்... "
-இதுதான் டீசரில் அஜீத் பேசும் வசனம்.
படம் பொங்கலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. இந்த வாரம் சென்சாருக்கு அனுப்பப்படுகிறது. அதன் பிறகே தியேட்டர்கள் விவரம் இறுதி செய்யப்படும்.
Post a Comment