போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாகும் தௌலத்

|

போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து இன்னும் ஒரு புதிய படம் உருவாகிறது. இந்தப் படத்துக்கு தௌலத் என்று தலைப்பிட்டுள்ளனர்.

ரைட் ஆர்ட்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக முகம்மதுஅலி, சசிகலா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார் சஞ்சய்சிவன்.

போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாகும் தௌலத்

இவர் ஏற்கனவே கோட்டி, ஆண்டவப்பெருமாள் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர். அத்துடன் "பணவாசி"என்ற கன்னட படம் ஒன்றிலும் நாயகனாக நடித்திருக்கிறார்.

நாயகியாக ரேஷ்மி கெளதம் நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் ஜெயபாலன், ஐசக், யோகிபாபு, வைரவன், அஜெய்பிரபு, ஏ.கே.எஸ், சலா , விஜய் மணி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஏ பி இமாலயன் இமாலயன் இசையமைக்கிறார்.

படம் குறித்து சஞ்சய் சிவன் கூறுகையில், "எதிர் கால உலகையே பயமுறுத்தும் அதிநவீன ஆயுதமான போதை கடத்தலை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.

தௌலத், அலெக்ஸ் என்ற இரண்டு தாதாக்களின் சாம்ராஜ்ய பின்னணிதான் கதை! தங்கத்தை விட உயர்ந்த விலை கொண்ட போதை பொருள் பெங்களூர் வழியாக சென்னைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் எப்படி கடத்தப் படுகிறது என்பதை ஆக்ஷன் படமாக உருவாக்கி உள்ளோம்.

படப்பிடிப்பு பெங்களூர், சென்னை, ஊட்டி மற்றும் கர்நாடக மாநிலம் உத்தர கர்நாடகாவின் சிரிசி என்ற இடத்திலும் நடிபெற்றுள்ளது," என்றார்.

 

Post a Comment