தன் சொந்தக் கதையைப் படமாக்கி வரும் பிரபல நடிகை ஷகிலாவுக்கு யாரோ சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்களாம்.
கவர்ச்சி நடிகை ஷகிலா தெலுங்கில் ‘ரொமான்டிக் டார்கட்' என்ற படத்தை இயக்கி வருகிறார். தன் வாழ்க்கையில் நடந்த பாலியல் கொடுமைகள் உள்பட, இருட்டு உலகுக்குள் நடக்கும் பல அவலங்களை இந்தப் படத்தில் சொல்லப் போகிறாராம் அவர்.
இதில் அரசியல்வாதிகள், முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பற்றியும் காட்சிகள் உள்ளனவாம்.
இதனால் ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. படத்தை வெளியிட்டால் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று சிலர் போனில் எச்சரிக்கிறார்களாம்.
ஹைதராபாதில் நேற்று நடந்த இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஷகிலா இவற்றைத் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, ‘‘மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன். தடைகளை மீறி படத்தை வெளியிடப் போகிறேன்'' என்றார்.
இந்த படத்தில் நரேஷ் நாயகனாகவும், ஸ்வேதா சைனி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
Post a Comment