ஆண் குழந்தைக்கு அப்பாவானார் பாண்டியநாடு இயக்குநர் சுசீந்திரன்

|

சென்னை: இயக்குநர் சுசீந்திரன் - ரேணுகா தம்பதியினருக்கு அழகான ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். தனது முதல் படமான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதை சுசீந்திரன் பெற்றுள்ளார்.

ஆண் குழந்தைக்கு அப்பாவானார் பாண்டியநாடு இயக்குநர் சுசீந்திரன்

2011 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த அழகர்சாமியின் குதிரை படத்துக்கு சிறந்த மனமகிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. தற்போது விஷாலுடன் இணைந்து பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றை சுசீந்திரன் இயக்கி வருகிறார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மே 28-ந் தேதி மணப்பாறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் சுசீந்திரன்-ரேணுகா திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏற்கனவே தர்ஷன் என்ற 4 வயது மகன் உள்ளான். இந்நிலையில் இன்று காலை 9.23 மணியளவில் ஈரோடு அருகே உள்ள கொடுமுடியில் சுசீந்திரன்-ரேணுகா தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை சுசீந்திரன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகர் அஜீத்துக்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சியான தகவல் வெளியான நிலையில், இயக்குநர் சுசீந்திரனுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது கோலிவுட்டில் மகிழ்ச்சி அலைகளை பரவச் செய்துள்ளது.

 

Post a Comment