சென்னை: தமிழில் 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷின் இரண்டாவது படம், வை ராஜா வை ஏப்ரல் 24 திரைக்கு வருகிறது. சென்சார், படத்துக்கு யு சான்றிதழ் தந்துள்ளதால், 30 சதவீத வரிவிலக்குக்கு படம் தகுதி பெற்றுள்ளது.
3 படத்தின் மூலம் இயக்குநரான ஐஸ்வர்யா தனுஷ், இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது 2வது படமாக வை ராஜா வை படத்தை இயக்கியுள்ளார். பல திரையுலக வாரிசுகள் இதில் இணைந்துள்ளனர்.
வை ராஜா வை படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் டாப்ஸிக்கு முக்கியமான வேடமாம்.
டேனியல் பாலாஜி நீண்ட நாட்களுக்குப் பிறகு வில்லத்தனம் செய்திருக்கிறார். நகைச்சுவைக்கு விவேக். கடல் படத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக்குக்கு அதன் பிறகு எந்தப் படமும் சரியாக அமையவில்லை.
இந்த நிலையில், தனது திரைவாழ்க்கையின் முதல் திருப்புமுனையாக வை ராஜா வையையே நம்பியுள்ளார். நம்பிக்கையை படம் காப்பாற்றும் என்கிறார்கள் பட யூனிட்டை சேர்ந்தவர்கள்.
Post a Comment