மணிரத்னம் இயக்கி வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்தை அமெரிக்காவில் நண்பர்களுடன் பார்த்து ரசித்தார் மெகா இயக்குநர் ஷங்கர்.
ஷங்கர் இப்போது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடக்கும் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார்.
கடந்த வியாழன்கிழமை அங்கு ஓ காதல் கண்மணி படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. மணிரத்னத்தின் தீவிர ரசிகன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஷங்கர், படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்து தன் நண்பர்களுடன் பார்த்து ரசித்தார்.
அவர் படம் பார்க்கும்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளன.
ஷங்கர் அடுத்து ரஜினியை வைத்து எந்திரன் 2 படத்தை இயக்கப் போகிறார். அது தொடர்பான தொழில்நுட்ப வேலைகள் குறித்தும் அமெரிக்காவில் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.
Post a Comment