ரஜினியின் புதிய படம் குறித்து பல்வேறு செய்திகள், யூகங்கள், வதந்திகள் உலா வரும் நிலையில், ஷங்கருடன்தான் அடுத்து படம் செய்கிறார் ரஜினி, அதற்கு இசை ஏ ஆர் ரஹ்மான்தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
ரஜினியின் புதுப் படத்தை இயக்குகிறார்கள் என்று பலரது பெயர்களும் அடிபடுகின்றன.
இப்போதைக்கு ஷங்கர் - ரஜினி கூட்டணி குறித்துதான் அதிகம் பேசப்படுகிறது.
இந்தப் படத்துக்கு இசை யார் என்பது வரை தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முதல் அனிருத் இசையமைப்பார் என்றார்கள். அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை என்றார்கள். காரணம், ரஹ்மான் ரொம்பவும் பிஸியாக இருப்பதாலும், லிங்காவில் கொஞ்சம் அவர் இசை எடுபடாமல் போனதாலும், ஹாரிஸ் இசையமைப்பார் என்றார்கள்.
ஆனால் இப்போது, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்றும், அவரிடம் சமீபத்தில் ஷங்கரும் ரஜினியும் பேசி முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment