புத்தம் புதுக் காலை, நின்னுக்கோரி வர்ணம் பாடல்களை புதிதாய் ஷூட் பண்ண முடியுமா உங்களால்?

|

ரசிகர்கள் மற்றும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்க இளையராஜா ஒரு போட்டி வைத்திருக்கிறார்.

அவரது புகழ்பெற்ற புத்தம் புதுக்காலை மற்றும் நின்னுக்கோரி வர்ணம் பாடல்களை, இளம் படைப்பாளிகள் புதிதாகப் படமாக்கித் தர வேண்டும். அவற்றில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து பரிசளிக்க்ப போகிறார் இளையராஜா.

Ilaiyaraaja announces new contest for young talents

இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "எனது புதிய இணையதளத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் போட்டிகளும் புதிய படைப்பாளிக்கு சினிமாவில் தங்களுடைய பங்களிப்பை செலுத்தும் வகையிலான வாய்ப்புகளும் வழங்கப்படும்.

குறிப்பாக நான் தேர்வு செய்த ‘புத்தம் புது காலை', ‘நின்னுக்கோரி வர்ணம்' போன்ற இரண்டு பாடல்களும் இளம் படைப்பாளிகள் தங்களுடைய திறமையில் புதிதாக படப்பிடிப்பு நடத்துங்கள். இந்த படக்காட்சிகளை என் பார்வைக்கு வரும் வண்ணம் இணையத்தில் பதிவு செய்யுங்கள்.

பாடலுக்கு ஏற்ற வகையில் காட்சிகள் பொருத்தமாகவும் சிறப்பாகவும் இருக்குமானால் அதனை நானே தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசளிப்பேன். இதேபோல் நான் எடுத்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கவிதை எழுதலாம்.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ரசிகர்கள் www.ilaiyaraajalive.com என்ற இணையத்திற்கு சென்று விபரங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அக்டோபர் 31ம் தேதிக்குள் உங்களுடைய படைப்புகளை இணையத்தில் பதிவு செய்து விடுங்கள்," என்றார்.

 

Post a Comment