ஹீரோ, வில்லன் இரண்டுமே நான் தான்!
12/28/2010 12:18:57 PM
சில்வர்லைன் பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் தயாரிக்கும் படம் 'சிங்கம் புலி'. சாய்ரமணி இயக்குகிறார். இரு வேடங்களில் ஜீவா நடிக்கிறார். திவ்யா ஸ்பந்தனா, ஹனிரோஸ் ஹீரோயின்கள். காமெடிக்கு சந்தானம். ஒளிப்பதிவு, பாலசுப்ரமணியெம். மணிசர்மா இசையில் நா.முத்துக்குமார், விவேகா, சாய்ரமணி, அண்ணாமலை பாடல்கள் எழுதியுள்ளனர்.
படத்தில், ஹீரோவும், வில்லனும் இரண்டுமே ஜீவா தான், படத்தில் வரும் இரண்டு ஜீவாக்களில் ஒருவர் பொதுவான தமிழும், இன்னொருவர் சென்னை பாஷையும் பேசுகிறார். சரி, இந்த இரண்டு ஜீவாவில் யார் வில்லன்? யார் ஹீரோ? அதுதான் திரைக்கதையின் சஸ்பென்ஸே என்கிறார் இயக்குனர்.
Source: Dinakaran
Post a Comment