நல்ல கேரக்டருக்காக போராடினேன்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நல்ல கேரக்டருக்காக போராடினேன்

1/31/2011 6:32:51 PM

'தவமாய் தவமிருந்து' படத்தில் அறிமுகமானவர் மீனாள். பிறகு சில படங்களில் நடித்தாலும், 'ஆடுகளம்' அவருக்கு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: 'தவமாய் தவமிருந்து' படத்துக்கு பிறகு நல்ல கேரக்டர் அமையவில்லை. அதற்காக போராடினேன். 'ஆடுகளம்' வாய்ப்பை பெற்றுத் தந்ததே, 'தவமாய் தவமிருந்து' படம்தான். அந்த படத்தில் என்னை பார்த்துவிட்டுதான் வெற்றி மாறன் நடிக்க அழைத்தார். 60 வயது முதியவருக்கு மனைவி கேரக்டர் என்றதும் முதலில் தயங்கினேன். 'முதியவரின் மனைவி என்றாலும் நீங்கள் இளமையானவர்தான்' என்றார். அந்த வார்த்தைக்காக நடித்தேன். இப்போது படம் பார்த்தவர்கள் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது. இப்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன்.


Source: Dinakaran
 

Post a Comment