3/21/2011 10:30:09 AM
'காதலுக்கு நான் எதிரி இல்லை. என் மனதுக்குப் பிடித்தவரை தேடிக் கொண்டிருக்கிறேன்' என்றார் சமீரா ரெட்டி. இதுபற்றி அவர் கூறியதாவது: 'நடுநிசி நாய்கள்' படத்தின் புரமோஷன், பிரபுதேவா பட ஷூட்டிங், கோழிகோடில் நடந்த கலைநிகழ்ச்சி என்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்ததால் உடல் நலம் சரியில்லாமல் போனது. இப்போது குணமாகிவிட்டேன். தமிழில் லிங்குசாமி இயக்கும் படத்தில் நடித்துவருகிறேன். இதனுடன் விஷால் நடிக்கும் படம், பிரியதர்ஷன் இயக்கும் இந்திபடம், கவுதம் மேனம் இயக்கும் படம் என இந்த வருடம் முழுவதும் பிசியாக இருக்கிறேன். யாரையும் காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். காதலுக்கு நான் எதிரி இல்லை. இவ்வளவு பிசியாக இருக்கும்போது நான் யாரை போய் காதலிப்பது? இருந்தாலும் என மனதுக்குப் பிடித்தவரை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.
Post a Comment