4/4/2011 1:46:36 PM
. இதையடுத்து காரைக்குடியில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் ஏறி வந்துகொண்டிருந்தனர். ரசிகர்களுக்கு அடையாளம் தெரியாமல் இருக்க ஆர்யா, தொப்பி அணிந்திருந்தார். சமீரா தலையில் ஒரு துணியை போட்டிருந்தார். காலையில் எழும்பூர் ஸ்டேஷனில் இறங்கினால் ரசிகர்கள் தொந்தரவு இருக்கும் என்று தாம்பரத்தில் இறங்க முடிவு செய்திருந்தனர். இதையடுத்து ஆர்யாவின் கார் தாம்பரத்தில் காத்திருந்தது. வெள்ளிக்கிழமை காலை 7.30&க்கு ரயிலில் இருந்து இருவரும் இறங்கினர். அப்போது திடீரென்று ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டு சுற்றி வளைத்தனர்.
அவர்களிடம் இருந்து வெளியேற இருவரும் சிரமப்பட்டனர். ஆர்யாவின் டிரைவரும் நண்பர் ஒருவரும் உள்ளே வந்து இருவரையும் ரசிகர்களிடம் இருந்து மீட்டனர். இச்சம்பவத்தால் தாம்பரம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Post a Comment