6/8/2011 10:59:31 AM
இப்போதைக்கு திருமணம் பற்றி யோசிக்கவில்லை. இரண்டு வருடத்துக்குப் பிறகு அதுபற்றி யோசிப்பேன் என்றார் பாவனா. அவர் மேலும் கூறியதாவது: மலையாளத்தில் நான் நடித்து தற்போது ரிலீஸ் ஆகியுள்ள 'மேரிக்கொண்டொரு குஞ்சாடு' ஹிட்டாகியுள்ளது. இதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இந்தப் படம் ஹிட்டாகும் என்று தெரியும். இதையடுத்து மோகன்லாலுடன் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடித்துள்ள படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் எனது ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும். வழக்கமாக எல்லா நடிகைகளுடன் நட்புடன் இருக்கிறீர்களே எப்படி? என்று கேட்கிறார்கள். நான் சினிமாவுக்கு வந்த காலத்தில், அப்போதிருந்த சில ஹீரோயின்களால் அவமானப்படுத்தப்பட்டேன். அந்த நிலை மற்றவர்களுக்கு வரவேண்டாம் என்றுதான் உடனே நட்பாகி விடுகிறேன். தமிழில் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். எப்போது திருமணம் என்கிறார்கள். இதற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன். இன்னும் இரண்டு வருடங்களுக்கு அது பற்றி யோசிக்கப் போவதில்லை. இவ்வாறு பாவனா கூறினார்.
Post a Comment