6/23/2011 12:54:04 PM
சமூக சேவையில் குதிக்கும் தென்னிந்திய நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அதில் புதிதாக இணைந்திருப்பவர் 'வாமனன்' பட ஹீரோயின் பிரியா ஆனந்த். இது பற்றி பிரியா கூறியது: குழந்தைகள் மீது எப்போதுமே எனக்கு ஈர்ப்பு அதிகம். அதனால் தென்னிந்தியாவில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்ந்தேன். அந்நிறுவனம் மூலம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். இணையதளம் மூலம் எனது நண்பர்களையும் இதில் உதவ கேட்டிருக்கிறேன். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் ஆந்திராவிலுள்ள ஒரு கிராமத்துக்கு சென்றேன். அங்கே தொழிற்சாலைகளில் வேலை செய்த குழந்தைகளை மீட்க நானும் எனது குழுவினரும் நடவடிக்கை எடுத்தோம். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக மற்ற நடிகைகளும் முயற்சி எடுக்க முன் வரவேண்டும்.
Post a Comment