'தமிழில் பெரிய வாய்ப்புகளெல்லாம் தேடி வந்து கதவைத் தட்ட, நடிகை அமலா பாலோ தாய்மொழியான மலையாளப் படவுலகுக்கு முக்கியத்துவம் தருகிறார். பிருத்விராஜ் படத்தில் நடிக்கிறார்' என்றெல்லாம் செய்திகள் வர, அலறியடித்துக் கொண்டு மறுப்பு வெளியிட்டுள்ளார் அமலா.
தமிழில் விக்ரம், ஆர்யா, மாதவன் என பெரிய நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார் அமலா.
இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தி வந்தால், தமிழ் சினிமாவில் தனது எதிர்காலம் பாதிக்கும் என்பதால் இந்த மறுப்பை அவசரமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மலையாளத்தில் வாய்ப்புகள் வந்தது உண்மைதான். ஆனால் அவற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. மலையாளத்தை வெறுக்கவில்லை. ஆனால் இப்போதைக்கு தமிழுக்குதான் முக்கியத்துவம்," என்று கூறியுள்ளார்.
தெலுங்கிலும் நிறைய வாய்ப்புகள் வந்துள்ளனவாம். அவற்றில் இரண்டு படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
முடிந்தவரை சம்பாதிக்க தமிழ்-தெலுங்கு, ரிட்டயர்மெண்டை நெருங்கும்போது மலையாளம் என்பது அமலா பால் பாலிசி போலிருக்கிறது!
தமிழில் விக்ரம், ஆர்யா, மாதவன் என பெரிய நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார் அமலா.
இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தி வந்தால், தமிழ் சினிமாவில் தனது எதிர்காலம் பாதிக்கும் என்பதால் இந்த மறுப்பை அவசரமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மலையாளத்தில் வாய்ப்புகள் வந்தது உண்மைதான். ஆனால் அவற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. மலையாளத்தை வெறுக்கவில்லை. ஆனால் இப்போதைக்கு தமிழுக்குதான் முக்கியத்துவம்," என்று கூறியுள்ளார்.
தெலுங்கிலும் நிறைய வாய்ப்புகள் வந்துள்ளனவாம். அவற்றில் இரண்டு படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
முடிந்தவரை சம்பாதிக்க தமிழ்-தெலுங்கு, ரிட்டயர்மெண்டை நெருங்கும்போது மலையாளம் என்பது அமலா பால் பாலிசி போலிருக்கிறது!
Post a Comment