போட்டோகிராபர் மீது பாய்ச்சலா?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

போட்டோகிராபர் மீது பாய்ச்சலா?

6/23/2011 12:52:39 PM

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார் ஸ்ரேயா. அப்போது போட்டோகிராபர்கள் அவரை படம் பிடித்தனர். இதைக் கண்டு ஸ்ரேயா கோபம் அடைந்ததாகவும் ‘கேமரா ஃபிளாஷ் விழுவது தனக்கு பிடிக்கவில்லை’ என்று போட்டோகிராபர்களை கடிந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இது குறித்து ஸ்ரேயா கூறியது: இது போல் ஒரு வதந்தி பரவும் என நான் நினைக்கவே இல்லை. சமீபத்தில் நடந்த விழாவில் என்னை போட்டோ எடுக்க நிறைய பேர் வந்தனர். அனைவருக்கும் சிரித்தபடிதான் போஸ் கொடுத்தேன். அதற்குள் இப்படியெல்லாம் கதை  கட்டிவிட்டார்கள். இதுபோல் கீழ்த்தரமாக நான் எப்போதும் நடந்தது கிடையாது. நடக்கவும் மாட்டேன். தமிழில் 'ரவுத்திரம்' படத்தில் ஜீவாவுடன் நடிக்கிறேன். இந்தியில் தீபா மேத்தாவின் ‘மிட்நைட் சில்ட்ரன்’ படம் உள்ளது. மேலும் 2 படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

 

Post a Comment