சல்மான் கானுக்கும் தனக்கும் காதல் என்று வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை ஸ்ரேயா.
சல்மான்கானுக்கும் ஸ்ரேயாவுக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக மும்பை பட உலகில் கிசுகிசு பரவியது. அதற்கு ஏற்றார்போல இருவரும் ஜோடியாக சுற்றி வந்தனர். சல்மான் கான் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவுக்கு இருவருக்கும் நெருக்கம் உருவானது.
சமீபத்தில் நடிகர், நடிகைகள் இணைந்து நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தினர். இப்போட்டியின் விளம்பரதாரராக ஸ்ரேயா இருந்தார்.
மும்பையில் கிரிக்கெட் போட்டி நடந்தபோது சல்மான்கானும் ஸ்ரேயாவும் ஒன்றாகவே காணப்பட்டனர்.
ஸ்டண்ட் நடிகர் பெப்சி விஜயன் மார்க்கண்டேயன் படத்தில் தனது மகனை நாயகனாக்கி உள்ளார். இப்படத்தின் பாடல் சி.டி. சமீபத்தில் சென்னையில் வெளியிட்ட போது சல்மான்கானும், ஸ்ரேயாவும் இணைந்து பங்கேற்றனர். இருவரும் அருகருகே உட்கார்ந்து சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தார்கள். சல்மான்கானை பார்ப்பதற்காகவே ஸ்ரேயா இவ்விழாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சல்மான்கான் சகோதரி அர்பிதாகான் பிறந்தநாள் விருந்து மும்பையில் கடந்த வாரம் நடைபெற்றது. இவ்விருந்துக்கு ஸ்ரேயா அழைக்கப்பட்டு இருந்தார். விருந்தில் சல்மான்கானும் ஸ்ரேயாவும் நெருக்கமாக இருந்தனர்.
இதையெல்லாம் வைத்து மீடியாவில் இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் வர ஆரம்பித்தன.
சல்மான்கானை காதலிக்கிறீர்களா என்று ஸ்ரேயாவிடம் கேட்டபோது, மறுத்தார். "சல்மான்கான் நல்லவர். மனிதாபமானம் மிக்கவர். நாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம். எங்களுக்குள் காதல் என கிசு கிசுக்கள் பரவுவது வருத்தமாக உள்ளது. இது போன்ற சர்ச்சைகளில் தயவு செய்து என்னை இழுத்து விடாதீர்கள்," என்றார்
சல்மான்கானுக்கும் ஸ்ரேயாவுக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக மும்பை பட உலகில் கிசுகிசு பரவியது. அதற்கு ஏற்றார்போல இருவரும் ஜோடியாக சுற்றி வந்தனர். சல்மான் கான் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவுக்கு இருவருக்கும் நெருக்கம் உருவானது.
சமீபத்தில் நடிகர், நடிகைகள் இணைந்து நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தினர். இப்போட்டியின் விளம்பரதாரராக ஸ்ரேயா இருந்தார்.
மும்பையில் கிரிக்கெட் போட்டி நடந்தபோது சல்மான்கானும் ஸ்ரேயாவும் ஒன்றாகவே காணப்பட்டனர்.
ஸ்டண்ட் நடிகர் பெப்சி விஜயன் மார்க்கண்டேயன் படத்தில் தனது மகனை நாயகனாக்கி உள்ளார். இப்படத்தின் பாடல் சி.டி. சமீபத்தில் சென்னையில் வெளியிட்ட போது சல்மான்கானும், ஸ்ரேயாவும் இணைந்து பங்கேற்றனர். இருவரும் அருகருகே உட்கார்ந்து சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தார்கள். சல்மான்கானை பார்ப்பதற்காகவே ஸ்ரேயா இவ்விழாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சல்மான்கான் சகோதரி அர்பிதாகான் பிறந்தநாள் விருந்து மும்பையில் கடந்த வாரம் நடைபெற்றது. இவ்விருந்துக்கு ஸ்ரேயா அழைக்கப்பட்டு இருந்தார். விருந்தில் சல்மான்கானும் ஸ்ரேயாவும் நெருக்கமாக இருந்தனர்.
இதையெல்லாம் வைத்து மீடியாவில் இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் வர ஆரம்பித்தன.
சல்மான்கானை காதலிக்கிறீர்களா என்று ஸ்ரேயாவிடம் கேட்டபோது, மறுத்தார். "சல்மான்கான் நல்லவர். மனிதாபமானம் மிக்கவர். நாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம். எங்களுக்குள் காதல் என கிசு கிசுக்கள் பரவுவது வருத்தமாக உள்ளது. இது போன்ற சர்ச்சைகளில் தயவு செய்து என்னை இழுத்து விடாதீர்கள்," என்றார்
Post a Comment