தர்ஷனுடன் தொடர்பா? - நிகிதா விளக்கம்

|


கன்னட நடிகர் தர்ஷனுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதாக என்னைப் பற்றி வரும் வதந்திகள் என்னை கவலையடை வைக்கின்றன என்றார் நடிகை நிகிதா.

கன்னட நடிகர் தர்ஷன், தன் மனைவி விஜயலட்சுமியை அடித்து உதைத்து காயப்படுத்தியதாகவும் கத்தியால் குத்த முயன்றதாகவும் கூறி கைது செய்யப்பட்டார்.

நடிகை நிகிதாவுக்கும் தர்ஷனுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் இதனால்தான் அவர் தன்னை கொல்ல முயன்றார் என்றும் விஜயலட்சுமி பரபரப்பான புகார் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து தனது விளக்கத்தை அளித்துள்ளார் நடிகை நிகிதா.

அவர் கூறுகையில், "தர்ஷனுடன் நட்பாகத்தான் பழகினேன். எங்களுக்குள் வேறு மாதிரி தொடர்பு இல்லை.

நான் ஏற்கெனவே மனம் நொந்து போய் இருக்கிறேன். எனது தந்தை சமீபத்தில்தான் மரணம் அடைந்தார். குடும்ப ரீதியாக, தொழில்ரீதியாக நிறைய பிரச்சினைகளிலும் சிக்கியுள்ளேன். இந்த நிலையில் இதுபோன்ற அவதூறுகள் என்னை கவலை அடைய செய்கின்றன," என்றார்.

புகார் வாபஸ்

இதற்கிடையே தர்ஷன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மீது அளித்த புகாரை மனைவி விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார்.
 

Post a Comment