தேடிச் சென்று வாய்ப்பு கேட்பதில்லை என்று பிரியாமணி கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இப்போது அதிகம் நடித்துக் கொண்டிருப்பது கன்னடத்தில்தான். பிப்ரவரியிலிருந்து தெலுங்கு படம் நடிக்கிறேன். மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். 2012 கடைசி வரை கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் தமிழ்ப் படம் கிடைத்தால் வந்து விடுவேன். யாரையும் தேடிச் சென்று வாய்ப்பு கேட்காததுதான் தமிழ் படங்கள் அமையாததற்கு காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையாக கூட இருக்கலாம். எந்த மொழியிலும் தேடிச் சென்று வாய்ப்பு கேட்பதில்லை. அப்படி கேட்டிருந்தால் இப்போது இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பேன்.
Post a Comment