ஒரே படத்தில் 5 வகையான இசை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' படத்துக்கு 5 வகையான இசை அமைத்திருக்கிறார் தாஜ் நூர். இதுகுறித்து அவர் கூறியதாவது: இசைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து இசை அமைக்கிறேன். எனது முதல் படமாக 'வம்சம்' வெளிவந்தாலும் என்னை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியது, 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' படம்தான். அதனால் எனது முழு திறமையையும் இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறேன். படத்தின் கதை தமிழகத்தின் புவியியல் அமைப்பான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை 5 நிலங்களில் நடக்கிறது. எனவே இந்த நிலங்களுக்கே உரித்தான தனித்தனி பின்னணி இசையை கொடுத்திருக்கிறேன். அந்ததந்த பகுதியில் பயன்படுத்தும் இசைக் கருவிகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன். அதோடு மேற்கத்திய இசையை கொண்டு தமிழ் கலாசாரத்தை சொல்ல முயற்சித்திருக்கிறேன்.


 

Post a Comment