சென்னை: பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
பெப்சிக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். 2012-2014-ம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
அன்று காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறும்.
அன்று இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் அதிகாரியாக ஸ்டண்ட் ïனியன் முன்னாள் செயலாளர் கே.நாராயணன் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் 'பெப்சி' செயலாளர் ஜி.சிவா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.
Post a Comment