அலைகள் ஓய்வதில்லையில் அறிமுகமாகி, எண்பது மற்றும் தொன்னூறுகளில் முன்னணி நடிகராகத் திகழ்ந்தவர் கார்த்திக்.
பின்னர் அரசியலில் குதித்து, நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினார். ஆனால் அதில் வெற்றி பெறவில்லை.
மீண்டும் நடிக்க வந்த அவர், மாஞ்சாவேலு, ராவணன், புலிவேஷம் படங்களில் நடித்தார். அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை.
மகன் கவுதமை ஹீரோவாக்கும் முயற்சிகளில் தீவிரமாக இருந்தார். மணிரத்னத்தின் கடல் என்ற படத்தில் இப்போது கவுதம் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். மகனுக்கு உதவியாக பட வேலைகளையும் கவனித்து வந்தார் கார்த்திக்.
இந்த நிலையில் கார்த்திக்குக்கு திடீர் உடல் நலக்குறைவு எற்பட்டது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Post a Comment