புதிய சேட்டிலைட் சேனலான ஜெய் டிவி நாளை முதல் ஒளிபரப்பாக உள்ளது.
ஜெய் டிவி என்ற புதிய தனியார் தொலைக்காட்சி சேனல், கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பே தனது சோதனை ஒளிபரப்பை துவக்கியுள்ளது. தற்பொழுது தனது சேனலின் முழுமையான சேவை செப்டம்பர் மாதம் 12முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒளிபரப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜயதசமியன்று அதாவது அக்டோபர் 24ம் தேதி ஜெய் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக தமிழ் தொலைக்காட்சி உலகில் ஏகப்பட்ட சானல்கள் புற்றீசல் போல பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்திருப்பது நேயர்களை குஷிப்படுத்த ஆரம்பித்துள்ளது. அதேசமயம், எல்லா சானலும் வித்தியாசமாக இருந்து, 'சீரியல் கொலை'களைச் செய்யாமல் இருந்தால் இன்னும் பெட்டராக இருக்கும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Post a Comment