இரு வாரங்களுக்கு முன்பு மனிஷாகொய்ரலாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மும்பை ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனை செய்ததில் அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து சென்றனர்.
நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் மனிஷா கொய்ராலா அனுமதிக்கப்பட்டார். அங்கு சில தினங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.
சிகிச்சைக்கு பிறகு மனிஷாகொய்ரலா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இனி ஆபத்தில்லை என்பது உறுதியானதும், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆனாலும் அவர் இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்கள் வரை அவர் அமெரிக்காவிலேயே தங்கியிருப்பார்.
Post a Comment