ஷிப்டிங் முறையில் இங்கிலாந்தில் 5வது வாரமாகத் தொடர்கிறது விஸ்வரூபம் - அய்ங்கரன்

|

Viswaroopam Still Runs England On Shifting Basis

இங்கிலாந்தில் 5வது வாரமாக விஸ்வரூபம் படம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதாக அய்ங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் ரசிகர்கள் கேட்டுக் கொள்வதற்கிணங்க, புதிய புதிய ஏரியாக்களில் இந்தப் படத்தை ஷிப்டிங் முறையில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் 8 தியேட்டர்களில் இந்த வாரம் ஓடிக் கொண்டிருக்கிறது விஸ்வரூபம்.

இதுகுறித்து அய்ங்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இங்கிலாந்தில் 5வது வாரமாக ஓடும் முதல் தமிழ்ப் படம் விஸ்வரூபம். கமல் ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, உருது, மராட்டி பேசும் மக்கள் இந்தப் படத்தை தங்கள் பகுதிகளில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த வாரம் 8 சினிவேர்ல்டு அரங்குகளில் படத்தை திரையிட்டுள்ளோம். அவரவர் பகுதிகளில் படம் வெளியாக வேண்டும் என விரும்புவோர் அதற்கான வேண்டுகோளை எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

விரைவில் பாலாவின் பரதேசி உள்பட பல பெரிய படங்களை வெளியிடவிருக்கிறோம்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Post a Comment