மணிரத்னத்தின் கடல் படத்தைப் பார்த்த பலரும் அடித்துள்ள கமெண்ட் இதுதான்.
ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களின் கிண்டலுக்குள்ளான, எதிர்ப்பார்ப்பைக் கிளறாத படமாகத்தான் கடல் பார்க்கப்பட்டது.
இன்று படம் வெளியான சில மணி நேரங்களில் இந்தப் படத்தின் ரிசல்ட் வந்துவிட்டது. சிலர் இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் படத்துக்கு எதிர்மறையான கமெண்டுகளைக் கூறியுள்ளனர்.
க'டல்' என ரொம்ப சிக்கனமாக விமர்சனம் எழுதிவிட்டவர்களும் உண்டு!
படத்தில் அர்ஜுன் மற்றும் அரவிந்தசாமிக்குதான் முக்கிய வேடம் என்றும், ஹீரோ - ஹீரோயின் எனப்பட்ட கார்த்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி சும்மா ஊறுகாய் மாதிரிதான் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
விஸ்வரூபத்துக்கு ஒதுக்கப்பட்ட அரங்குகள்தான் இந்தப் படத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் ரசிகர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல், ரஹ்மானின் பாடல்களை ரசித்துக் கேட்டதுதான் என்றனர்.
+ comments + 2 comments
unmaya padam nala dan iruku. en negative review varudunu therila.
not in manirathanam style,nothing special in rajivmenon camera...why mani choose this story it is nothing in it????
Post a Comment