3 படத்துக்குப் பிறகு கவுதம் கார்த்திக்கை வைத்து ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா அடுத்த படம் தொடங்குகிறார் என்று கூறியிருந்தோம் அல்லவா... இதோ இன்று தொடங்கிவிட்டார்.
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை எந்தவித ஆசம்பரமும் இல்லாமல், மகா சிம்பிளாக இன்று தொடங்கினார் ஐஸ்வர்யா.
கவுதம் கார்த்தி நடித்த முதல் படமான கடல் படுதோல்வியைத் தழுவியதும், அந்த நஷ்டப் பணத்தை திரும்பப் பெற விநியோகஸ்தர்கள் மல்லுக் கட்டிக் கொண்டிருப்பதும் நினைவிருக்கலாம்.
ஐஸ்வர்யா இயக்கிய முதல் படமான 3 யும் வசூல் ரீதியாக பலத்த அடியைத் தந்துவிட்டது விநியோகஸ்தர்களுக்கு.
முதல் படங்களில் தோல்வியைச் சந்தித்த இருவரும் இப்போது இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா என்பது பெரிய ப்ளஸ்.
3 படத்துக்கு ஏற்பட்ட அசாதாரண எதிர்ப்பார்ப்பு அந்தப் படத்தைக் கவிழ்த்தது. ஆனால் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், மகா சாதாரணமாக ஆரம்பித்துள்ள இந்தப் படம் ஐஸ்வர்யா எதிர்ப்பார்க்கும் அந்தஸ்தைத் தருமா? பார்க்கலாம்!
Post a Comment