மனதில் மாயம் செய்தாய் - ஹீரோயினாக ரிச்சா பனய் அறிமுகம்!

|

Manathil Mayam Seithai Movie Launch

மனதில் மாயம் செய்தாய் படத்தின் நாயகியாக ரிச்சா பனய் அறிமுகமாகிறார்.

இப்படத்தின் துவக்க விழா இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. தெலுங்கில் சில படங்களில் நடித்து காதல் நாயகன் என பெயரெடுத்த பிரின்ஸ் நாயகனாக அறிமுகமாக , 'மைனா' திரைப்படம் மூலமாக அறிமுகமான சேது மற்றுமொரு நாயகனாக நடிக்கிறார். ப்படத்தில் அவர்களது இணையாக 'தமிழ் படம் ' மூலம் அறிமுகமான திஷா பாண்டே மற்றும் புதுமுகம் ரிச்சா பனய் நடிக்கின்றனர்.

வின்சி மன்கடம் மற்றும் ஜெய்சன் புலிகுட்டில் ஆகியோர் ஃபுல் ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்க, சுரேஷ்.பி .குமார் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் கதையை பற்றி பேசிய இயக்குனர் சுரேஷ் பி குமார் கூறுகையில், "தெளிவான நீர் அலையில் வீசப்படும் ஒரு சிறு கல் எவ்வளவு சஞ்சலத்தை ஏற்படுத்துமோ, அதே அளவுக்கு காதலிலும் ஏற்படும் சிறு சச்சரவுகள் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தும் என்ற மைய கருத்தை வைத்து இசையுடன் ஜனரஞ்சகத்தையும் கலந்து கொடுக்க இருக்கிறோம்.

என்னுடைய பலமாக ஒளிப்பதிவாளர் வெங்கட் அநுமான், கலை இயக்குனர் மோகன், இசை அமைப்பாளர் மனிகாந்த் கத்ரி என ஒரு திறமையான குழு இருப்பது என் அதிர்ஷ்டமே," என கூறினார் .

இயக்குனர் பிரபு சாலமன் தலைமையில் நடந்த இந்த விழாவில் சாட்டை இயக்குனர் அன்பழகன், நடிகர் ஸ்ரீகாந்த் , மற்றும் பல் வேறு துறையை சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Post a Comment