மாமிக்கு என்னாச்சி... ஷூட்டிங்கையே காலி பண்றாங்களே!

|

இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள் பத்துவருஷமாக கோலிவுட்டில் கொடி நாட்டி வரும் அந்த டாப் ஹீரோயின் பற்றி.

காரணம், அம்மணி காட்டும் அலட்சியமும் ஷூட்டிங்கை அடிக்கடி கேன்ல் செய்து கடபப்பேற்றுவதும்தானாம்.

அவ்வப்போது பார்ட்டி சர்ச்சைகளில் சிக்கினாலும் சமீப காலம் வரை தொழிலில் ரொம்பவே சின்சியர் சிகாமணியாகத்தான் இருந்தாராம் நடிகை. ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவரின் அட்ராசிட்டி தாங்க முடிவில்லை என கதறுகிறார்கள் படக்குழுவினர்.

ஒன்று படப்பிடிப்புக்கே வருவதில்லை... அப்படியே வந்தாலும் படக்குழுவினரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் மணிக்கணக்காக நண்பர்களுடன் அரட்டையில் இறங்கிவிடுகிறாராம். குறிப்பாக சிரிப்பு படப்பிடிப்பில் தன் அம்மாவை அவமானப்படுத்தியதிலிருந்து அந்தக் குழுவை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையாம்.

என்னாச்சி... சீரியஸாகவே மாப்பிள்ளை பார்க்கிறார்களோ!

 

Post a Comment