இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வைகைப் புயல் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார் என்று மகிழ்ந்த வேளையில், அதில் மண்ணள்ளிப் போட்டுவிட்டது ஒரு செய்தி.
அது, அந்தப் படமே கிட்டத்தட்ட ட்ராப் என்பதுதான்.
காரணம், ஒளிப்பதிவாளர் கிடைக்காததோ அல்லது வேறு காரணங்களோ இல்லை. இயக்குநருக்கும் புயலுக்கும் சுத்தமாய் ஒத்துப் போகவில்லையாம்.
ஆரம்பத்திலிருந்தே புயலின் யோசனைகள் எதையும் டைக்டர் கேட்பதாய் இல்லையாம். ஏதோ நாம்தான் அவருக்கு மறுவாழ்க்கை தரப்போகிறோம் என்ற நினைப்பில் டைரக்டர் நடந்து கொண்டதாக புயல் தரப்பில் புகார்.
நம்மைய மதிக்கவே மாட்டேங்குறான்யா அந்தாளு, என டைரக்டர் தரப்பில் பஞ்சாத்து.
இதை ரொம்ப நாளாகப் பார்த்து பொறுமையிழந்த புரொடக்ஷன் தரப்பு, படத்தையே நிறுத்தி விட்டது. இப்போது டைரக்டர் அதே நிறுவனத்துக்காக குதிரை ஓட்டக் கிளம்பிவிட்டார்.
புயலோ சூப்பர் ஸ்டாரின் ஆஸ்தான நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கிறாராம்!
Post a Comment