'எரியறத புடுங்கினா... தானா அடங்கப் போகுது!'

|

கவுண்டமணி, வடிவேலு இல்லாத கேப்பில் கொடி கட்டிப் பறந்து வரும் காமெடி நடிகர் மீது உச்சகட்ட கடுப்பிலிருக்கிறார்கள் பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்.

காரணம், நடிகர் கிர்ரென்று ஏற்றி வரும் சம்பளம் மட்டுமல்ல, படம் நடித்துக் கொடுத்துவிட்டு, வேறு எதையும் கண்டு கொள்ளாமல் பறந்துவிடுவதுதானாம்.

படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகள், அட.. குறைந்தபட்சம் குழு நேர்காணலுக்குக் கூட வர மாட்டேன் என்கிறாராம்.

சமீபத்தில் ஒரு பெரிய தயாரிப்பாளரின் பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்த போது, வேறு ஒரு படத்துக்கு கால்ஷீட் தந்திருக்கிறேன். வந்தால், அந்த ஒரு நாள் கால்ஷீட்டுக்கான நஷ்ட ஈட்டைத் தரமுடியுமா என்று திருப்பிக் கேட்டாராம். அது பல லட்சங்களைத் தாண்டுவதால், தயாரிப்பாளர் அமைதியாக திரும்பிவிட்டாராம்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் காரசாரமாக விவாதித்திருக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். அப்போது, 'அட ஏன்யா, நாமளே வளர்த்துவிட்டு இப்போ குத்துது குடையுதுன்னு... இனி படத்துக்கு அக்ரிமென்ட் போடும்போதே, விளம்பரத்துக்கும் ஒரு வார கால்ஷீட்னு சொல்லி புக் பண்ணிடுவோம். இல்லன்னா புது காமெடியன்களை உருவாக்குவோம்... எரியிறதைப் பிடுங்கினா தானா அடங்கப் போகுது," என்றாராம் மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.

 

Post a Comment