கடல் நடிகைக்காக ‘வலை’ வீசும் அம்மா

|

பெரும் எதிர்பார்ப்புகளுடனும், பில்டப்களுடன் வெளியான மீன்பிடிக்கும் இடத்துப் படம் காலை வாரி விட்டதில் பெரும் கவலை நாயகியின் அம்மாவான முன்னாள் நாயகிக்குத் தானாம்.

நாயகனின் மகனான ஹீரோ அடுத்தடுத்து மூன்று படங்களில் புக்காகி விட, பாவம் பாப்பாக்குத் தான் படம் ஒன்றும் சிக்கவில்லையாம். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படமும், முன்னொரு காலத்தில் புக்கானதாம்.

மகளின் திறமையைப் பார்த்து, வரிசைக் கட்டி நிற்பார்கள் என எதிர்பார்த்திருந்த அம்மாவுக்கு ஏமாற்றம் தான் கிடைத்ததாம்.

சூர்ய புத்திரரின் நட்சத்திரப்படத்தில், பள்ளி மாணவி வேடம் ஹீரோயினுக்கு என்பதால், இண்டஸ்ட்ரீலயே இவ தான சின்னப் பொண்ணு, சோ இந்த வாசனைச் செடியத் தான் தேடி வருவாங்கனு நினைச்சுட்டு இருந்தாங்களாம்.

ஆனா, வாய்ப்பு வசந்தமான நடிகைக்குப் போய் விட வருத்தத்தில் உள்ளாராம் அம்மா.

ஏன் மேடம், உண்மையச் சொல்லுங்க, நீங்க காலேஜ் கேர்ளா நடிக்கும் போது, உண்மையிலேயே உங்களுக்கு எத்தனை வயசு?

 

Post a Comment