நடிகர் வடிவேலு வீட்டு வாட்ச்மேன் திடீர் மரணம்... போலீஸ் விசாரணை

|

சென்னை: நடிகர் வடிவேலு வீட்டு வாட்ச்மேனாக வேலை பார்த்துவந்த நபர் இன்று காலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வீட்டில் காவலாளியாக நேபாளத்தைச் சேர்ந்த வினோத் கௌதம் என்பவர் வேலை செய்து வந்தவர். இவர் இன்று காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென கீழே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

இது குறித்து, விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். வினோத் கௌதமின் உடலை பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Post a Comment