புடாபெஸ்ட் பறந்த செல்வராகவன் - அனிருத்

|

புடாபெஸ்ட் பறந்த செல்வராகவன் - அனிருத்

இரண்டாம் உலகம் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளுக்காக ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட் நகருக்குப் பறந்துள்ளனர் இயக்குநர் செல்வராகவனும் இசையமைப்பாளர் அனிருத்தும்.

இரண்டாம் உலகம் படத்தின் பாடல்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ், படத்துக்குப் பின்னணி இசையமைக்க முடியாமல் ஒதுங்கிவிட்டார்.

வேறு படங்களில் பிஸியாகிவிட்டதால் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாக விளக்கமும் சொல்லிவிட்டார்.

முதலில் ஒப்புக் கொண்ட படத்தை முடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களுக்கு எப்படி முக்கியத்துவம் தரலாம் என அவரை நோக்கி விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இயக்குநர் செல்வராகவன், தனது புது கூட்டாளியான இசையமைப்பாளர் அனிருத்தை அழைத்துக் கொண்டு, ஹங்கேரி நாட்டுத் தலைநகரான புடாபெஸ்டுக்குப் பறந்திருக்கிறார்.

இரண்டாம் உலகம் படத்தின் பின்னணி இசையை இங்கு வைத்துதான் உருவாக்கப் போகிறார்களாம். பத்து நாட்கள் புடாபெஸ்டில் தங்கியிருந்து இசையமைப்புப் பணியை முடித்துக் கொண்டு வருகிறோம் என செல்வராகவன் அறிவித்துள்ளார்.

அப்படியெனில் படம் தீபாவளிக்கு கன்பர்ம்தானா!

 

Post a Comment