பாஜகவில் சேர்ந்தார் சீரியல் நடிகை மாளவிகா

|

பாஜகவில் சேர்ந்தார் சீரியல் நடிகை மாளவிகா

பெங்களூர்: பிரபல நடிகை மாளவிகா கர்நாடக பா.ஜ.கவில் இணைந்துள்ளார். அண்ணி டிவி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா.

தமிழ் சினிமாவில் ஆறு, ஜெ.ஜெ ஆதி, ஜெயம்கொண்டான், டிஷ்யூம்' உட்பட, தமிழ் மற்றும் கன்னட மொழிப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

கடந்தாண்டு, கர்நாடகாவில், தேவகவுடாவின், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் சேர்ந்தார். கட்சியை வளர்க்க பாடுபட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். பின்னர் சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகினார் இந்த நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

செல்லமே

ராதிகாவின் செல்லமே தொடரில் நடித்தார் மாளவிகா. கன்னட திரையுலகிலும் நடித்து பிரபலமடைந்துள்ளார்.

மோடியின் சுயசரிதை

பாஜகவில் இணைந்தது பற்றி கருத்து கூறியுள்ள மாணவிகா, நரேந்திர மோடியின் சுயசரிதை புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். அவரது, வாழ்க்கை, மக்கள் நலச்சேவைகளின் செயல்பாடு எனக்கு பிடித்திருந்தன. அவர் எனக்கு முன்னுதாரணமாக தெரிந்தார். அவரது கருத்துக்கள் என்னை ஈர்த்தது. எனவே,பா.ஜ.,வில் இணைந்தேன்' என, தெரிவித்துள்ளார்.

மாளவிகாவின் கணவர்

மாளவிகாவின் கணவர் அவினாஷ் கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் இதுவரை எந்த கட்சியிலும் சேரவில்லை.

பூஜா காந்தியை பின்பற்றி பாஜகாவில் சேர்ந்தீர்களா என்று மாளவிகாவிடம் கேட்டதற்கு. அரசியலில் நான் பூஜா காந்தியை பின்பற்ற வில்லை. என்னை அவரோடு ஒப்பிடவேண்டாம் என்று கூறியுள்ளார் மாளவிகா.

 

Post a Comment